/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி: மின்கம்பிகள் சீரமைப்பு
/
தினமலர் செய்தி எதிரொலி: மின்கம்பிகள் சீரமைப்பு
PUBLISHED ON : ஏப் 19, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி:
சிங்கம்புணரி அருகே விவசாய நிலத்தில் தாழ்வாக தொங்கிய மின் கம்பிகள் தினமலர் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.
மு.சூரக்குடி ஊராட்சி அம்மிவயல் பகுதியில் மின் கம்பி தாழ்வாக சென்றன. அந்த பகுதியில் நடமாடவும், கால்நடைகளை ஓட்டிச்செல்லவும் விவசாயிகள் அஞ்சினர். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாமல் இருந்தது.
இதுகுறித்து தினமலரில் செய்தி வெளியானது இச்செய்தி எதிரொலியாக மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
தாழ்வாக சென்ற அனைத்து மின்கம்பிகளும் பாதுகாப்பாக உயர்த்தி கட்டப்பட்டது.

