sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

தினமலர் செய்தி: மயானத்தில் வசதி

/

தினமலர் செய்தி: மயானத்தில் வசதி

தினமலர் செய்தி: மயானத்தில் வசதி

தினமலர் செய்தி: மயானத்தில் வசதி


PUBLISHED ON : நவ 10, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 10, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநகர்: தினமலர் செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றம் ஒன்றிய விளாச்சேரி பொது மயானத்தில் ஆபத்தான நிலையில் இருந்த கட்டடம் அகற்றப்பட்டு புதிதாக கட்டப்படுகிறது.

அங்குள்ள பொது மயானத்திலுள்ள கட்டடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதில் இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்கின் போது, உறவினர்கள் அமர்ந்து மொட்டை போடுகின்றனர். இந்நிலையில் அக்கட்டடம் முழுவதும் சேதமடைந்து எப்பொழுது விழுமோ என்ற ஆபத்தான நிலையில் உள்ளது.

அருகிலுள்ள கட்டடம் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அக்கட்டடத்தில் இறந்தோரின் உறவினர்கள் அமர்ந்து பணிகளை பார்வையிடுவர். சடங்குகளும் நடைபெறும். அந்த கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்த கான்கிரீட் முழுமையாக விழுந்து கம்பிகள் மட்டும் தொங்கி கொண்டு இருக்கின்றன. ஒரு சில இடங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் கான்கிரீட் எப்பொழுது விழுமோ என்ற பயத்தில் மக்கள் இருந்தனர்.

அந்த 2 கட்டடங்களையும் முழுமையாக அகற்றிவிட்டு புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என

தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து மயானத்தின் வெளியில் இருந்த கட்டடம் முழுமையாக அகற்றப்பட்டு அங்கு புதிய கட்டடம் கட்டும் பணி நடக்கிறது.






      Dinamalar
      Follow us