/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
செய்தி எதிரொலி கால்நடை தொட்டிக்கு குடிநீர் குழாய் அமைப்பு
/
செய்தி எதிரொலி கால்நடை தொட்டிக்கு குடிநீர் குழாய் அமைப்பு
செய்தி எதிரொலி கால்நடை தொட்டிக்கு குடிநீர் குழாய் அமைப்பு
செய்தி எதிரொலி கால்நடை தொட்டிக்கு குடிநீர் குழாய் அமைப்பு
PUBLISHED ON : ஜன 24, 2025 12:00 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம் புத்தேரி ஊராட்சி, சாலபோகம் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே, கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், கடந்த 2019ம் ஆண்டு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 20,000 ரூபாய் செலவில், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
இருப்பினும், கால்நடை தொட்டியில் தண்ணீர் நிரப்ப குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், மேய்ச்சலுக்கு சென்று வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் தாகம் தீர்க்க முடியாத நிலையில், குடிநீர் தொட்டி வீணாகி வருகிறது.
எனவே, கால்நடை தொட்டிக்கு குடிநீர் குழாய் ஏற்படுத்த வேண்டும் என, சாலபோகம் கிராமத்தை சேர்ந்த கால்நடை விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, புத்தேரி ஊராட்சி நிர்வாகம் சார்பில், சாலபோகம் கிராமத்தில் உள்ள கால்நடை தொட்டிக்கு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

