PUBLISHED ON : நவ 26, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலவளவில் 6 மாதங்களுக்கும் மேலாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பூட்டி கிடந்தது. அதனால் மக்கள் பயிர், நகை கடன், உரம், இடுபொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கூட்டுறவு சங்க மதுரை மண்டல இணை பதிவாளர் சதீஷ் ஏற்பாட்டில் சொசைட்டி திறக்கப்பட்டது. இங்கு விவசாயிகளுக்கு உரிய கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

