/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தியால் பாதை சீரமைப்பு
/
தினமலர் செய்தியால் பாதை சீரமைப்பு
PUBLISHED ON : செப் 09, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே சக்கரப்ப நாயக்கனுாரில் ஊருக்கு வெளியே உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதற்கு செல்லும் பாதையின் இருபுறமும் கருவேல மரங்கள் நிறைந்து காடு போன்று காட்சியளித்தது.
பாதை முழுவதும் கருவேலமுற்கள் பரவியிருந்தது. மேலும் இப்பகுதியில் குப்பை கொட்டும் இடமாகவும், திறந்தவெளி கழிப்பிடமாகவும் மாறியது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாதையை சீரமைத்தனர்.