PUBLISHED ON : பிப் 08, 2026 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டியில் குழாய் உடைந்து காவிரி மற்றும் ஊராட்சி போர்வெல் தண்ணீர் 4 நாட்களாக வீணாகியது.
இதனால் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை, சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ஊராட்சி செயலாளர் சிவராமகிருஷ்ணன் ஏற்பாட்டில் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டு வீணாகிய குடிநீர் நிறுத்தப்பட்டது.

