sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

 அடிக்கடி விபத்துகள் நடந்த வண்டலுாரில் வேகத்தடை அமைப்பு

/

 அடிக்கடி விபத்துகள் நடந்த வண்டலுாரில் வேகத்தடை அமைப்பு

 அடிக்கடி விபத்துகள் நடந்த வண்டலுாரில் வேகத்தடை அமைப்பு

 அடிக்கடி விபத்துகள் நடந்த வண்டலுாரில் வேகத்தடை அமைப்பு


PUBLISHED ON : டிச 10, 2025 08:22 AM

Google News

PUBLISHED ON : டிச 10, 2025 08:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வண்டலுார்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, அடிக்கடி விபத்துகள் நடந்த வண்டலுார், மூகாம்பிகை அம்மன் கோவில் அருகே, வேகத்தடை அமைக்கப்பட்டது.

வண்டலுார் ஊராட்சி, சிங்காரத் தோட்டம் பகுதியில், 50 ஆண்டுகள் பழமையான மூகாம்பிகை அம்மன் கோவில் உள்ளது.

ஓட்டேரி விரிவு பகுதியிலிருந்து துவங்கும் 5 மீ., அகலம் உள்ள தார்ச்சாலை, இக்கோவிலை கடந்து, 2 கி.மீ., துாரத்தில் உள்ள பெருங்களத்துார் ரயில் நிலையத்தை அடைகிறது.

வண்டலுார் -- பெருங்களத்துார் இடையேயான ஜி.எஸ்.டி., சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது, இலகுரக வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

இந்த சாலை வண்டலுார், சிங்காரத் தோட்டம், மூகாம்பிகை கோவில் அருகே வளைவாக செல்வதால், கோவிலை கடக்கும் வாகன ஓட்டிகளுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை.

இதனால், கோவில் முன்பாக எதிரெதிரே வரும் வாகனங்கள் மோதி, அடிக்கடி விபத்து ஏற்பட்டது.

எனவே, விபத்தை தவிர்க்க, கோவில் முன் உள்ள சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக, ஊராட்சி நிர்வாகம் சார்பில், வேகத்தடை அமைக்கப்பட்டது. இதனால், பகுதிவாசிகள், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us