sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

" டவுட்' தனபாலு

/

" டவுட்' தனபாலு

" டவுட்' தனபாலு

" டவுட்' தனபாலு


PUBLISHED ON : செப் 02, 2011 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 02, 2011 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி: முதல்வர் நரேந்திர மோடியிடம் ஆலோசிக்காமலே லோக் ஆயுக்தாவை குஜராத் கவர்னர் நியமித்துள்ளார்.

இது அரசியல் சட்ட விரோதம்; ஜனநாயக விரோதம்; இந்திய வரலாற்றில் இதுவரை இப்படி நடந்ததே இல்லை.



டவுட் தனபாலு: உங்களை மாதிரி மூத்த அரசியல்வாதிகள் எல்லாம் இப்படிச் சொல்லலாமா...? இப்படி, முன்னுதாரணமே இல்லைங்கிற பழிச்சொல் வந்துடக் கூடாதுன்னு தானே, ஏற்கனவே கர்நாடகாவில் பரத்வாஜை கவர்னரா நியமிச்சு, எடியூரப்பா கண்ல விரல் விட்டு ஆட்டினோம்... அப்போ, எடி... இப்போ மோடி...! முன்னுதாரணம் இருக்கா,

இல்லையா...?



பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி: லோக்பாலை அரசியல் சட்ட அமைப்பாக்குவது பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது, மக்கள் விருப்பப்படி, கடுமையான லோக்பாலை விரைவாக அமைக்கும் நடவடிக்கைக்குத் தான்

முன்னுரிமை அளிக்க வேண்டும்.



டவுட் தனபாலு: லோக்பால் பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு...? உங்க மேல இதுவரை ஒரு ஊழல் வழக்காவது இருக்கா...? வரலாறு காணாத முறைகேடு ஏதாவது பண்ணியிருக்கீங்களா...? அப்புறம் என்ன தகுதியில நீங்க அதைப் பத்தி பேசறீங்க...?



பா.ஜ., மூத்த தலைவர் ராஜ்நாத் சிங்: நாட்டில் விவசாயிகளின் நிலைமை மோசமாக உள்ளது. அவர்களின் பிரச்னையை கவனமுடன் அணுகவில்லை என்றால், ஒவ்வொரு இந்தியனும் சாப்பாட்டுக்கே அல்லாட வேண்டியிருக்கும்.



டவுட் தனபாலு: நீங்க வேற... நாட்டுலயே அரசியல்வாதிகளின் நேரடித் தலையீடு இல்லாம, அது ஒண்ணு தான் உருப்படியா நடந்துட்டு இருக்கு... இதுவரைக்கும், விவசாயம் பண்ணி, நஷ்டமடைஞ்ச விவசாயிகள் தான் தற்கொலை பண்ணியிருக்காங்க... அவங்க பார்வை பட்டா, விவசாயம் பண்ணாமலே விவசாயிகள் தற்கொலை பண்ணிக்க வேண்டியது தான்...!








      Dinamalar
      Follow us