sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பொக்கிஷம்/ வீரமும் ஈரமும் கலந்த குடியரசு தின விழா

வீரமும் ஈரமும் கலந்த குடியரசு தின விழா

வீரமும் ஈரமும் கலந்த குடியரசு தின விழா


PUBLISHED ON : ஜன 26, 2026 06:35 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 26, 2026 06:35 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நாடு இன்று தனது 77-வது குடியரசு தினத்தை எழுச்சியுடனும், பெருமிதத்துடனும் கொண்டாடியது. டெல்லி முதல் சென்னை வரை, ஒவ்வொரு மாநிலத் தலைநகரங்களிலும் மூவர்ணக் கொடி கம்பீரமாகப் பறக்க, இந்தியாவின் ராணுவ வலிமையும், மண்ணின் மணமும் மாறாத கலாச்சார விழுமியங்களும் கண்கவர் காட்சிகளாக விரிந்தன.Image 1526956'வந்தே மாதரம்' முழக்கத்தில் விஸ்வரூபம் எடுத்த ராணுவ வலிமைநாட்டின் மையப்பகுதியான டெல்லி கடமைப் பாதையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.Image 1526957ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களான உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் பங்கேற்றது இந்தியாவின் உலகளாவிய ராஜதந்திர உறவை உறுதிப்படுத்தியது.Image 1526958உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'சூர்யாஸ்த்ரா' ஏவுகணை அமைப்பு மற்றும் போர் முனைகளில் சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட நவீன ஆயுதங்கள் அணிவகுப்பில் இடம்பெற்றன. குறிப்பாக, 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றியை விளக்கும் முப்படையினரின் கூட்டு அணிவகுப்பு இந்தியாவின் பாதுகாப்பு அரணை உலகிற்கு உணர்த்தியது.Image 1526959ஒவ்வொரு மாநிலமும் தனது தனித்துவமான கலாச்சாரத்தை அலங்கார ஊர்திகள் மூலம் கண்முன்னே நிறுத்தின'தற்சார்பு இந்தியா' மற்றும் 'தொழில்நுட்ப ஜல்லிக்கட்டு' எனும் கருப்பொருளில், மின்சார வாகன உற்பத்தியில் தமிழகம் அடைந்துள்ள வளர்ச்சியை பறைசாற்றும் ஊர்தி அனைவரையும் கவர்ந்தது.Image 1526960லோக்மாதா தேவி அகில்யாபாய் ஹோல்கரின் நிர்வாகத் திறனைப் போற்றும் மத்திய பிரதேச மாநில வாகனம்,இந்தியாவின் முதல் 'வாட்டர் மெட்ரோ' மற்றும் முழுமையான டிஜிட்டல் எழுத்தறிவு பெற்ற மாநிலம் என்பதை சொல்லும் கேரளா மாநில வாகனம், குரு தேக் பகதூர் அவர்களின் 350-வது தியாக தினத்தை முன்னிட்டு உருவாக்கப்பட்ட வாகனங்கள் பார்வையாளர்களை ஈர்த்தன.Image 1526961பாதுகாப்புப் படையினரின் கம்பீரமான அணிவகுப்புகளுக்கு மத்தியில் சில நெகிழ்ச்சியான காட்சிகளும் அரங்கேறின. போபாலில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி தனது சீருடைப் பணிக்கு மத்தியில் தன் குழந்தையைத் தூக்கி அணைத்து நின்ற காட்சி, 'கடமை ஒருபுறம், அன்பு ஒருபுறம்' என்பதை உலகுக்கு உணர்த்தியது. இதுவே இந்திய ஜனநாயகத்தின் அழகியல்.Image 1526962விழாவின் உச்சகட்டமாக விமானப்படையின் ரஃபேல் மற்றும் சுகோய் போர் விமானங்கள் வானில் நிகழ்த்திய சாகசங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின. மூவர்ணப் புகையை உமிழ்ந்தபடி விமானங்கள் சீறிப்பாய்ந்தது பாரத அன்னையின் வீரத்திற்கு மகுடம் சூட்டுவது போல் இருந்தது.

இந்த 77-வது குடியரசு தின விழா, வெறும் கொண்டாட்டமாக மட்டுமின்றி, 'வளர்ந்த பாரதம்' மற்றும் 'வந்தே மாதரம்' எனும் தாரக மந்திரத்தின் அடிப்படையில் இந்தியா அடைந்து வரும் பொருளாதார, ராணுவ மற்றும் கலாச்சார எழுச்சியை உலக நாடுகளுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us