sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : மார் 03, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 03, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம்: தி.மு.க., முன்னாள் அமைச்சர்பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடந்த ஆண்டு டிச., 21ல், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த எம்.எல்.ஏ., பதவி பறிபோய் விட்டது. ஆனால், அவரது திருக்கோவிலுார் தொகுதி காலியானதாக இன்னும் அறிவிக்கவில்லை. அதை அறிவிக்க வேண்டியது சபாநாயகர் கடமை.

டவுட் தனபாலு: காங்கிரஸ்ல இருந்து பா.ஜ.,வில் சேர்ந்த விஜயதரணி எம்.எல்.ஏ.,வின் ராஜினாமா கடிதத்தை உடனே ஏத்துக்கிட்டு, அந்த தொகுதி காலியா இருப்பதாக சபாநாயகர்அறிவிச்சாரே... பொன்முடி விஷயத்துல மட்டும் மவுனமாக இருப்பது, அவரது நிடுநிலை மீது, 'டவுட்'களை கிளப்பாதா?

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன்: தமிழகத்தின் ஒட்டுமொத்த பிரச்னைகளை எதிரொலிக்கும் வகையில், எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை இருக்கும்; மத்திய, மாநில அரசுக்கு வழிகாட்டியாகவும் அமையும். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை, தேர்தலில் பேசுபொருளாக, 'சுப்ரீம் ஹீரோ'வாக இருக்கும்.



டவுட் தனபாலு: தேர்தல் அறிக்கையில, நீங்க ஆயிரம் வாக்குறுதிகளை அள்ளிவிடலாம்... ஆனா, சட்டசபை தேர்தலா இருந்தாலாவது, 'இவங்க ஆட்சிக்கு வந்தா, இதை எல்லாம் நிறைவேற்றுவாங்க'ன்னு மக்கள் நம்புவாங்க... நடக்க போறது, லோக்சபா தேர்தல் என்பதால, உங்க வாக்குறுதிகளை நம்புவாங்களா என்பது, 'டவுட்'தான்!



பத்திரிகை செய்தி: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள, 39 தொகுதிகளிலும், புதுச்சேரி லோக்சபா தொகுதியிலும், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், பிப்., 21 முதல், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம், வரும் 6ம் தேதி மாலை 5:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டவுட் தனபாலு: எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் விற்பனை நடக்கலையா அல்லது கட்சியினரிடம் இருந்து கால அவகாசத்தை நீட்டிக்கணும்னு கோரிக்கை வந்துச்சான்னு தெரியலையே... என்னதான் கால நீட்டிப்பு தந்தாலும், ஜெ., காலத்துல இருந்த போட்டா போட்டி இப்ப இருக்குமா என்பது, 'டவுட்'தான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us