sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஜூலை 30, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 30, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன்: பிரதமர் மோடி தமிழகம் வந்து, 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிந்த திட்டங்களை திறந்து வைத்துள்ளார். தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி கொடுக்கிறார். கடந்த, 2014ல் பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து இதுவரை, தமிழகத்துக்கு, 11 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை வழங்கி உள்ளார்.

டவுட் தனபாலு: இத்தனை லட்சம் கோடி ரூபாயை தமிழகத்துக்கு வாரி குடுத்திருக்கோம்னு சொல்றீங்களே... தமிழகத்துக்கான கல்வி நிதி 2,151 கோடி ரூபாயை மட்டும் இழுத்தடிப்பது ஏன் என்ற, 'டவுட்' வருதே!



விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக சிலர் கூட்டணிக்கு அழைக்கின்றனர். அப்படி என்றால், முதல்வர் பதவிக்கு நான் தகுதி இல்லாதவனா? 35 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எனக்கு, முதல்வர் ஆகும் தகுதி இல்லையா? கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், ராகுல் ஆகியோருடன் அரசியலில் பயணித்துள்ள எனக்கு, துணை முதல்வர் பதவி ஆசை காட்டினால் சென்று விடுவேன் என, நினைக்கின்றனர்.

டவுட் தனபாலு: தி.மு.க., பொதுச் செயலரான துரைமுருகன் கிட்டத்தட்ட, 60 - 65 வருஷம் அரசியல் அனுபவம் உள்ளவர்... அவருக்கு முதல்வர் ஆகும் தகுதியில்லையா என்ன...? என்னதான் தகுதி, திறமை இருந்தாலும், முதல்வர் பதவியில அமர்வதற்கு என்று தனி ராஜயோகம் வேண்டும் என்பதில், 'டவுட்'டே இல்லை!



தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்: உயர் பொறுப்புகளில் இருப்போர், அரசு மருத்துவமனைகளுக்கு போகும்போது, அவர்களுக்கான பாதுகாப்பு போன்றவற்றால், அங்கு வரும் பொதுமக்களுக்கான சேவை பாதிக்கப்படும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், முதல்வர் போன்றோர் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். அரசு மருத்துவமனை மிக சிறப்பாக இருப்பதால் தான், 2021க்கு பின், நோயாளிகள் வருகை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

டவுட் தனபாலு: முதல்வரின் அலுவலக அதிகாரிகள், பாதுகாப்பு போலீசார் எல்லாம் குவியுறப்ப, தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு போகும் பொதுமக்கள் பாதிக்கப்பட மாட்டாங்களா...? 2021க்கு பிறகு அரசு மருத்துவமனைகள் சிறப்பாக இருப்பதால் தான் நோயாளிகள் வருகை அதிகரிச்சிருக்கா அல்லது உங்க ஆட்சியால, நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகிடுச்சா என்ற, 'டவுட்'தான் வருது!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us