sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

'டவுட்' தனபாலு

/

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : அக் 29, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 29, 2025 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாம் தமிழர் கட்சி ஒருங் கிணைப்பாளர் சீமான்: 'டாஸ்மாக்' மதுபானங்களை பத்திரமாக பாதுகாக்க, பெரிய பெரிய கட்டடம் கட்டி, அதற்கு குளிரூட்டி, காவலர்களை போட்டு தி.மு.க., அரசு பாதுகாக்கிறது. ஆனால், உழைக்கும் விவசாயிகள், உயிரை கொடுத்து விளைவிக்கும் நெல்லை, தெருவில் கொட்டி மழையில் நனையவிடும் அவலம் உள்ளது. மக்களின் உயிரை பறிக்கும் சாராயத்தை பாதுகாக்கும் அரசு, உயிரை பாதுகாக்கும் உணவான நெல்லை பாதுகாக்கவில்லை.

டவுட் தனபாலு: நெல்லும், சாராயமும் ஒன்றாகிடுமா...? 'நெல்மணிகள் பாழா போயிடுச்சே'ன்னு விரக்தி அடையும் சில விவசாயிகளுக்கு, 'டாஸ்மாக்' மதுபானங்கள் தானே ஆறுதலா இருக்கு... அதனால தான், அதுக்கு முக்கியத்துவம் தந்து பாதுகாக்கிறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll

தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர்: ஓட்டு திருட்டுக்கு எதிராக, வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, கையெழுத்து இயக்கம் நடத்தி, அதை ஜனாதிபதிக்கு அனுப்ப காங்கிரஸ் திட்டமிட்டது. அத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இதுவரை, 76.06 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன. 1 கோடி இலக்கை அடைவோம் என எதிர்பார்க்கிறோம். பொது மக்களும், இளைஞர்களும் தானாக முன்வந்து கையெழுத்திட்டு ஆதங்கத்தை பதிவு செய்தனர்.

டவுட் தனபாலு: எல்லா கட்சிகளும், பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் தேர்தல் ஆலோசனை கூட்டங்களை நடத்திட்டு இருக்காங்க... நீங்க, ஓட்டு திருட்டுக்கு எதிரா கையெழுத்து வாங்க செலவிடும் நேரத்தில், கட்சி வளர்ச்சி பணியில் அக்கறை காட்டினா, தி.மு.க.,விடம் நாலு சீட்களை கூடுதலா கேட்டு வாங்கலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாகவும், தனி நீதிமன்றம் வாயிலாக அவற்றை விசாரித்து தண்டனை கொடுப்பேன் எனவும், கோடநாடு கொலை வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவும், அதற்கும் விரைவில் நல்ல தகவல் வரும் என்றும் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். தி.மு.க., ஆட்சிக்கு வந்து நாலரை ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வர் அளித்த வாக்குறுதி என்ன ஆனது?

டவுட் தனபாலு: முதல்வர் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதை இவர் குற்றம் சாட்டுவது மாதிரி தெரியலையே... இவரை கட்சியில் சேர்க்க மறுக்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, 'கோர்த்து விடும்' கோபம் தான் இதில் அப்பட்டமா தெரியுது என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll






      Dinamalar
      Follow us