sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : டிச 04, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 04, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் துவக்கி, அரசியலில் கால் பதித்துள்ளார்;அவரை வரவேற்கிறோம். அவரதுமாநாட்டில் நிறைய விஷயங்கள்பேசியிருக்கிறார். ஆனால், மாநாட்டுக்கு பின் அமைதியாகஇருக்கிறார். அவர், முழுநேர அரசியலுக்கு வரும்போது தான்,விஜயின் அரசியல் குறித்து விமர்சிக்க முடியும்.

டவுட் தனபாலு: அது சரி... மாநாட்டை நடத்தி முடிச்ச கையுடன்,வீட்டிலேயே விஜய் முடங்கிட்டாரு...கட்சியினரை கூட, அங்கு தான் வரவழைச்சு சந்திக்கிறாரு... இதைதான், 'பார்ட் டைம் அரசியல்வாதி'ன்னு நாசுக்கா சொல்லி, அவரை பகடி பண்ணியிருக்கீங்கஎன்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!



அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: பிரதான எதிர்க்கட்சி,மக்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளை உரிய நேரத்தில்அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்; அது எங்கள் கடமை. அந்த பிரச்னைகளை தீர்த்து வைப்பது முதல்வரது கடமை. ஆனால், தற்போதைய முதல்வர் நாங்கள் சொல்லும் பிரச்னைகளை தீர்ப்பதில்லை.

டவுட் தனபாலு: எதிர்க்கட்சி தலைவராக, உங்க கடமையை நீங்க செய்றீங்க... ஆனா, முதல்வரோ, 'எதிர்க்கட்சி தலைவருக்கு பதில் தராமல் இருப்பதுதான் என் கடமை' என்ற கொள்கையுடன் செயல்படுகிறாரோஎன்ற, 'டவுட்'தான் வருது!



அ.தி.மு.க., அமைப்பு செயலர்செங்கோட்டையன்: நடிகர் விஜய்,புதிய கட்சி துவக்கி இருக்கிறார்.அதை வைத்து, தேர்தலில் பெரியஅளவில் வெற்றி பெறலாம் என்றும் நினைக்கிறார். ஆனால்,எல்லா நடிகர்களும் எம்.ஜி.ஆர்.,ஆகிவிட முடியாது; வெற்றியும்எளிதில் கைகூடி விடாது. தி.மு.க.,வில் பல காலம் பணியாற்றி, பல நிலைகளில் பதவிகளில் இருந்து மக்கள் தொண்டாற்றிய பின்பே, எம்.ஜி.ஆர்.,கட்சி துவக்கினார்; அதன்பின்பே,தேர்தலில் போட்டியிட்டார். மக்களும், அவருக்கு மாபெரும் வெற்றியை தீர்ப்பாக வழங்கினர்.

டவுட் தனபாலு: சரியா சொன்னீங்க... இரண்டு முறை எம்.எல்.ஏ., சிறுசேமிப்பு துறை தலைவர் பதவின்னு, அரசியலில்படிப்படியாகவே எம்.ஜி.ஆர்., வளர்ந்தார்... 'இன்று கட்சி துவக்கி,நாளை முதல்வராகிடணும்'னு அவர் நினைக்கலை... இப்ப இருக்கிற நடிகர்களுக்கு இந்த உண்மை தெரியலையோ என்ற,'டவுட்'தான் வருது!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us