sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

கோயிலுக்கு நிலமளித்த இஸ்லாமியர்: கும்பாபிஷேகத்திற்கு சீர் வரிசையுடன் வருகை

/

கோயிலுக்கு நிலமளித்த இஸ்லாமியர்: கும்பாபிஷேகத்திற்கு சீர் வரிசையுடன் வருகை

கோயிலுக்கு நிலமளித்த இஸ்லாமியர்: கும்பாபிஷேகத்திற்கு சீர் வரிசையுடன் வருகை

கோயிலுக்கு நிலமளித்த இஸ்லாமியர்: கும்பாபிஷேகத்திற்கு சீர் வரிசையுடன் வருகை

11


ADDED : மே 27, 2024 06:56 AM

Google News

ADDED : மே 27, 2024 06:56 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம் : காங்கேயம் அருகே விநாயகர் கோயில் கட்ட நிலம் வழங்கிய இஸ்லாமியர்கள், கும்பாபிஷேக விழாவுக்கு, சீர்வரிசை வழங்கினர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த படியூர், ஓட்டப்பாளையம் ரோஸ் கார்டன் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும் உள்ளனர். இப்பகுதியில் விநாயகர் கோயில் கட்ட தீர்மானிக்கப்பட்டது.

போதிய இடம் இல்லாத நிலையில், அதே பகுதியில் ஆர்.எம்.ஜே.ரோஸ் கார்டன் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான, மூன்று சென்ட் நிலத்தை, இஸ்லாமியர்கள் கோவிலுக்கு வழங்கினர். இதன் மதிப்பு ஆறு லட்சம் ரூபாய். இதையடுத்து, கோயில் கட்டும் பணி நடந்து முடிந்தது.

நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக பள்ளிவாசலில் இருந்து ஐந்து தட்டுகளில் சீர்வரிசை பொருட்களை எடுத்து, ஊர்வலமாக வந்து கோவிலுக்கு வழங்கினர். விழாவில் அன்னதானமும் வழங்கினர்.






      Dinamalar
      Follow us