/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கர்ப்பிணி போலீசாருக்கு தடபுடலாக வளைகாப்பு
/
கர்ப்பிணி போலீசாருக்கு தடபுடலாக வளைகாப்பு
ADDED : பிப் 22, 2025 08:17 AM

நாமக்கல்; காவல் துறை சார்பில், கர்ப்பிணி போலீசாருக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்ட போலீசார் சார்பில், முதன்முறையாக கர்ப்பிணி போலீசாருக்கு வளைகாப்பு விழா, ஆயுதப்படை சமுதாயக் கூடத்தில், நேற்று கோலாகலமாக நடத்தப்பட்டது. இதில், ஜேடர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் எஸ்.ஐ., கதீஜாபேகம், ஆயுதப்படை இரண்டாம் நிலை பெண் காவலர் பிரார்த்தனா ஆகியோருக்கு போலீசார் சார்பில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு, கூடுதல் எஸ்.பி., தனராசு தலைமை வகித்தார். கூடுதல் எஸ்.பி., சண்முகம் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து, பெண் எஸ்.ஐ., மற்றும் தலைமைக் காவலர் இருவருக்கும், சீர்வரிசைப் பொருட்கள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன. பின், அவர்களுக்கு வளையல் அணிவித்து, ஐந்து வகையான உணவுகளை ஊட்டிவிட்டு, வளைகாப்பு நிகழ்ச்சியை விமரிசையாக நடத்தினர்.
போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் திரளாக பங்கேற்றனர்.