sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

குருவாயூர் கோவிலில் 356 ஜோடிகளுக்கு 'டும் டும்'

/

குருவாயூர் கோவிலில் 356 ஜோடிகளுக்கு 'டும் டும்'

குருவாயூர் கோவிலில் 356 ஜோடிகளுக்கு 'டும் டும்'

குருவாயூர் கோவிலில் 356 ஜோடிகளுக்கு 'டும் டும்'


ADDED : செப் 09, 2024 01:57 AM

Google News

ADDED : செப் 09, 2024 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சூர் : கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 356 ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடந்தது.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவில் உள்ளது. கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் இங்கு வருகின்றனர்.

அனுமதி


உலகளவில் திருமணங்கள் அதிகளவில் நடக்கும் கோவிலாக குருவாயூர் கிருஷ்ணர் கோவில் விளங்குகிறது. ஆவணி மாதத்தில் இங்கு அதிகளவு திருமணங்கள் நடப்பது வழக்கம். கடந்த 2022ல் ஆகஸ்ட் 21ம் தேதி, 248 திருமணங்கள் இங்கு நடந்தன. இதுதான் இதுவரை அதிகபட்சமாக இருந்தது.

ஆனால் நேற்று இந்த சாதனை முறியடிக்கப்பட்டு, ஒரே நாளில் 356 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதற்காக விரிவான ஏற்பாடுகளை குருவாயூர் தேவசம் போர்டு செய்து வந்தது.

திருமணத்தை நடத்தி வைப்பதற்காக கூடுதல் புரோகிதர்கள் நியமிக்கப்பட்டனர். வழக்கமாக நான்கு மணமேடைகள் இருக்கும் நிலையில், கூடுதலாக இரண்டு மேடைகள் அமைக்கப்பட்டன.

முகூர்த்த நாட்களில் காலை 5:00 மணி முதல் திருமண சடங்குகள் துவங்கிய நிலையில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கே முதல் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன்படி, அனைத்து ஜோடிகளும் வரிசையாக வந்து திருமணம் செய்து கொண்டனர். நண்பகல் 12:00 மணிக்குள் அனைத்து திருமணங்களும் நடத்தி முடிக்கப்பட்டன.

ஒவ்வொரு ஜோடிக்கும் உறவினர்கள், போட்டோ, வீடியோகிராபர்கள் உட்பட 24 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

போக்குவரத்து நெரிசல்


திரும்பிய திசையெல்லாம் திருமண ஜோடிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் காட்சியளித்ததால் குருவாயூர் நகரமே விழாக்கோலம் பூண்டது. அங்கிருந்த ஹோட்டல்கள், லாட்ஜுகள் நிரம்பி வழிந்தன. கோவில் உட்பட நகரத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும், இந்த நாளில் குருவாயூரில் வைத்து திருமணம் நடந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக திருமண ஜோடிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us