sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

குற்றங்களை தடுக்க சொந்த செலவில் கேமராக்களை பொருத்திய கிராமத்தினர்

/

குற்றங்களை தடுக்க சொந்த செலவில் கேமராக்களை பொருத்திய கிராமத்தினர்

குற்றங்களை தடுக்க சொந்த செலவில் கேமராக்களை பொருத்திய கிராமத்தினர்

குற்றங்களை தடுக்க சொந்த செலவில் கேமராக்களை பொருத்திய கிராமத்தினர்

1


UPDATED : ஆக 20, 2024 05:04 PM

ADDED : ஆக 20, 2024 06:58 AM

Google News

UPDATED : ஆக 20, 2024 05:04 PM ADDED : ஆக 20, 2024 06:58 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி : திருச்சுழி அருகே கிராமத்தில் குற்ற செயல்களை தடுக்க மக்கள் சொந்த செலவில் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்தியுள்ளனர்.

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பள்ளி மடம் ஊராட்சிக்கு உட்பட்டது காரேந்தல் கிராமம். திருச்சுழி நரிக்குடி பகுதிகளில் அடிக்கடி குற்றச் செயல்கள் நடந்து வருகிறது. குற்றவாளிகள் தப்பித்து உட்கடை கிராமங்களில் பதுங்கி வருகின்றனர். போலீசாருக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது.

இந்நிலையில் காரேந்தல் ஊர் மக்கள் ஒன்றிணைந்து தங்கள் சொந்த செலவில், ரூ.2 லட்சம் நிதியில், ஊரில் முக்கிய பகுதிகள், நவீன வகை சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்தி உள்ளனர். இதன் மூலம் குற்றச் செயல்கள் புரியும் நபர்கள், தேவையற்ற பிரச்சனைகளில் ஈடுபடுவோர் ஆகியோரை துல்லியமாக கண்காணிக்க இந்த கேமராக்கள் உதவும். போலீசார்களுக்கும் உதவிகரமாக இருக்கும்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கவும், போலீசாருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஊர் முழுவதும் கேமராக்களை பொருத்தியுள்ளோம். மேலும் எங்கள் கிராமம் குற்றமில்லாத கிராமமாக இருக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம், என்று கூறினர்.






      Dinamalar
      Follow us