sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

மனைவிக்கு 8 கல்யாணம் நடந்திருக்கு - கணவன் இல்லீங்க சார்... 4 திருமணம் தான்! - மனைவி

/

மனைவிக்கு 8 கல்யாணம் நடந்திருக்கு - கணவன் இல்லீங்க சார்... 4 திருமணம் தான்! - மனைவி

மனைவிக்கு 8 கல்யாணம் நடந்திருக்கு - கணவன் இல்லீங்க சார்... 4 திருமணம் தான்! - மனைவி

மனைவிக்கு 8 கல்யாணம் நடந்திருக்கு - கணவன் இல்லீங்க சார்... 4 திருமணம் தான்! - மனைவி

2


ADDED : செப் 12, 2024 01:08 AM

Google News

ADDED : செப் 12, 2024 01:08 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்யக்கோரி நடந்த விசாரணையின் போது, தன் மனைவிக்கு எட்டு கல்யாணம் நடந்துள்ளதாக கணவர் தரப்பு குற்றஞ்சாட்ட, 'அவர் சொல்வது பொய்... நாலு தான் நடந்திருக்கு' என மனைவி தரப்பு மறுத்துள்ளது.

கர்நாடக மாநிலம், விஜயநகராவின் ஹொஸ்பேட்டைச் சேர்ந்தவர் ராஜா உசேன். இவர் மீது, மனைவியை தாக்கி கொடுமைப்படுத்தியதாக, குடும்ப வன்முறை வழக்கு பதிவானது. வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி நாகபிரசன்னா விசாரிக்கிறார்.

கொடுமை

மனு மீது விசாரணை நேற்று நடந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், 'என் மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கு, அடிப்படை முகாந்திரம் இல்லை. இவரது மனைவி, மனுதாரர் உட்பட எட்டு பேரை திருமணம் செய்துள்ளார்.

'என் மனுதாரர் தான் கடைசி கணவர். ஏற்கனவே நடந்த ஏழு திருமணம் பற்றி கேட்டதால், கொடுமைப்படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்' என்றார்.

மனைவி தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், 'மனுதாரர் கூறுவது முற்றிலும் பொய். அவரது மனைவி எட்டு திருமணம் எல்லாம் செய்யவில்லை; நான்கு திருமணம் தான் செய்துள்ளார்.

'முதல் கணவர் இறந்த பின், அடுத்து மூன்று திருமணங்கள் செய்துள்ளார். மனுதாரர் தான் கடைசி கணவர். பொய் கூறும் கணவர் மீது, அவதுாறு வழக்கு தொடர உள்ளோம்' என்றார்.

உத்தரவு

மனுதாரர் தரப்பு வக்கீல் குறுக்கிட்டு, 'அப்பெண் எட்டு திருமணம் செய்ததற்கு, எங்களிடம் ஆவணங்கள் உள்ளன. கடந்த முறை நடந்த விசாரணையின் போது, மனுதாரர் உட்பட ஐந்து கணவர்கள் ஆஜராக வந்தனர்.

'ஆனால், அவர்களிடம் விசாரணை நடத்த முடியவில்லை. திருமணம் என்ற பெயரில் எட்டு பேரை அப்பெண் ஏமாற்றி உள்ளார். அவரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்; அன்று, எட்டு திருமணம் செய்தது குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்கும்படியும் கூறினார்.






      Dinamalar
      Follow us