sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

இளைஞர் உடல் உறுப்பு தானம்: ஏழு பேருக்கு மறுவாழ்வு 

/

இளைஞர் உடல் உறுப்பு தானம்: ஏழு பேருக்கு மறுவாழ்வு 

இளைஞர் உடல் உறுப்பு தானம்: ஏழு பேருக்கு மறுவாழ்வு 

இளைஞர் உடல் உறுப்பு தானம்: ஏழு பேருக்கு மறுவாழ்வு 

4


ADDED : மே 09, 2024 05:37 AM

Google News

ADDED : மே 09, 2024 05:37 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சென்னை மணலி புதுநகரை சேர்ந்தவர் மகேஷ், 33. மின் சக்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த, 5ம் தேதி பிற்பகல், 3:10 மணியளவில் தன் நண்பரை அவரது வீட்டில் இறக்கி விட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்தவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:40 மணியளவில் அவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க உறவினர்கள் முன்வந்தனர்.

அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட கல்லீரல், இரண்டு சிறுநீரகம், இதய வால்வு, தோல், இரண்டு கண்கள் என, ஏழு உறுப்புகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும், ஐந்து நோயாளிகளுக்கும், தனியார் மருத்துவமனைகளில் இரண்டு நோயாளிகளுக்கும் பொருத்தப்பட்டன.

விபத்தில், இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்ததால், அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக, மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரது உடலுக்கு மருத்துவமனை தரப்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us