/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
லண்டனில் 100 ஆண்டுகளாக இயங்கும் 'வீராசாமி' ஹோட்டலை காலி செய்ய உத்தரவு
/
லண்டனில் 100 ஆண்டுகளாக இயங்கும் 'வீராசாமி' ஹோட்டலை காலி செய்ய உத்தரவு
லண்டனில் 100 ஆண்டுகளாக இயங்கும் 'வீராசாமி' ஹோட்டலை காலி செய்ய உத்தரவு
லண்டனில் 100 ஆண்டுகளாக இயங்கும் 'வீராசாமி' ஹோட்டலை காலி செய்ய உத்தரவு
UPDATED : நவ 17, 2025 11:10 AM
ADDED : நவ 16, 2025 11:49 PM

லண்டன்: பிரிட்டனில் நுாற்றாண்டு பழமைவாய்ந்த இந்திய உணவகம் தனக்கான இடத்தை காப்பாற்றிக் கொள்ள சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது; இதற்கு பிரிட்டிஷ் சமையல் கலைஞர்கள் உட்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள ரீஜென்ட் தெருவில் 'வீராசாமி இந்திய உணவகம்' 1926ம் ஆண்டில் துவங்கப்ப ட்டது. நுாறு ஆண்டுகளை எட்ட உள்ளது இந்த உணவகம். இந்த உணவகத்தில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத், இந்திய முன்னாள் பிரதமர் நேரு, இந்திரா உட்பட பல பிரபலங்கள் இங்கு உணவருந்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உணவகம் அமைந்துள்ள நிலம், பிரிட்டன் மன்னருக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகித்து வரும் 'தி கிரவுன் எஸ்டேட்'க்கு சொந்தமானது என கூறப்படுகிறது. உணவகத்துக்கான ஒப்பந்தகாலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில், அந்த உணவகம் அமைந்துள்ள கட்டடத்தின் மேல் தளங்களில் செயல்பட்டு வரும் அலுவலகங்களுக்கு, கூடுதல் வசதிகளை செய்து தரும் வகையில் தரை தளத்தில் உள்ள பகுதிகளை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், உணவகத்துக்கான குத்தகை காலத்தை நீட்டிக்க கிரவுன் எஸ்டேட் நிறுவனம் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உணவக உரிமையாளர்களும் தங்கள் பாரம்பரிய இடத்தை மாற்ற முடியாது என வாதிட்டு வருகின்றனர். மேலும், பாதுகாக்கப்பட்ட குத்தகை உரிமை சட்டத்தின் கீழ் சட்ட நடவடி க்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்தாண்டு இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அதுவரை இந்த உணவகம் தொடர்ந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்- உணவகத்திற்கு ஆதரவாக பிரிட்டனின் முன்னணி சமையல் கலைஞர்களான ரேமண்ட் பிளாங்க், மைக்கேல் ரூக் ஜூனியர் மற்றும் சைரஸ் தோடிவாலா ஆகியோர் வெளிப்படையாகக் குரல் கொடுத்துள்ளனர்.
ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உணவகத்தை அலுவலக இடமாக மாற்றுவது அதன் புனிதத்தன்மையைக் கெடுக்கும் செயல் என்றும், இது லண்டனின் உணவகம் என்றும், சுற்றுலாத்துறைக்கு இது பெரிய இழப்பு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

