/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
ஐதராபாத்தில் இறந்த எழுத்தாளர் உடல் மருத்துவமனைக்கு தானம்
/
ஐதராபாத்தில் இறந்த எழுத்தாளர் உடல் மருத்துவமனைக்கு தானம்
ஐதராபாத்தில் இறந்த எழுத்தாளர் உடல் மருத்துவமனைக்கு தானம்
ஐதராபாத்தில் இறந்த எழுத்தாளர் உடல் மருத்துவமனைக்கு தானம்
ADDED : ஜன 19, 2025 11:14 PM

சிவகங்கை : ஐதராபாத்தில் இறந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி எழுத்தாளர் ஜனநேசன் என்ற வீரராகவன் 70, உடல் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
ஜனநேசன் காரைக்குடி அரசு அழகப்பா கல்லுாரியில் நுாலகராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் 10 சிறுகதைகள், 2 நாவல்கள், 3 கட்டுரை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். 2 மகன்கள் உள்ளனர்.
ஓய்வுக்கு பிறகு இவர் மகனுடன் ஐதராபாத்தில் வசித்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு இறந்தார். அவரது உடல் காரைக்குடி ஸ்ரீராம்நகர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
நேற்று மதியம் 12:00 மணிக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அவரது உடலை மகன் கர்ணன் மற்றும் குடும்பத்தினர் கண்காணிப்பாளர் கண்ணன், நிலைய மருத்துவ அலுவலர் மகேந்திரன், உதவி அலுவலர் தென்றல் ஆகியோரிடம் தானமாக வழங்கினர்.