ஹெல்மெட் அணியாத ஏட்டுவை ஜி.ஹெச்.,சுக்கு அனுப்பிய டி.ஐ.ஜி.,
ஹெல்மெட் அணியாத ஏட்டுவை ஜி.ஹெச்.,சுக்கு அனுப்பிய டி.ஐ.ஜி.,
UPDATED : ஜூன் 30, 2026 01:47 PM
ADDED : ஜூன் 30, 2026 04:44 AM

திருநெல்வேலி: ஹெல்மெட் அணியாத போலீஸ் ஏட்டுவை, ஜி.ஹெச்.,சுக்கு அனுப்பிய டி.ஐ.ஜி.,யின் செய ல் பாராட்டு பெற்று வருகிறது.
திருநெல்வேலி போலீஸ் ஸ்டேஷனில், ஏட்டாக பணியாற்றுபவர் வெங்கடேஷ், 50. இவர், ஹெல்மெட் அணியாமல் டூ - வீலரில் சென்றதை கவனித்த டி.ஐ.ஜி., திருநாவுக்கரசு, அவரிடம் இதுகுறித்து விசாரித்தார்.
அதன்பின், ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கி, அரசு மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெறுபவர்களை பார்த்துவிட்டு வருமாறு அறிவுறுத்தினார்.
இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்ற வெங்கடேஷ், விபத்தில் சிக்கியவர்களின் நிலையை நேரில் பார்த்து, மனம் கலங்கினார்.
'இனி தவறாமல் ஹெல்மெட் அணிவேன்' என வீடியோ வெளியிட்டதுடன், விழிப்புணர்வு ஏற்படுத்திய டி.ஐ.ஜி., திருநாவுக்கரசுவுக்கு நன்றி தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில், பாராட்டு பெற்று வருகிறது.
