UPDATED : ஏப் 19, 2026 09:54 AM
ADDED : ஏப் 19, 2026 03:48 AM

சென்னை: தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களை கவர்ந்து ஓட்டுக்களாக மாற்ற பிரதான கட்சிகள், 'கூப்பன்' முறையை கையில் எடுத்து, போட்டி போட்டு வினியோகம் செய்து வருகின்றன.
சென்னையில் மாதவரம், எழும்பூர், கொளத்துார், ஆர்.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் நேரடியாக மோதுகின்றன.
இங்கு வாக்காளர்களை கவர அவரவர் கட்சியில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையின் அடிப்படையில், வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு 'டம்மி' கூப்பன்களை வழங்கி வருகின்றனர்.
தி.மு.க., சார்பில் குடும்பத்திற்கு தலா 8,000 ரூபாய்க்கு கூப்பன் வழங்கப்படும் என்ற அறிவிப்பை மையப்படுத்தி 'டம்மி' கூப்பன் வழங்கப்படுகிறது.
அதேபோல, அ.தி.மு.க., தரப்பிலும் 10,000 மற்றும் 2,000 ரூபாய் என, இரு 'டம்மி' கூப்பன்கள் வழங்கி வருகின்றனர்.
இது வெறும் டம்மி என உணராமல், பகுதி மக்களும் போட்டி போட்டு கூப்பன்களை வாங்குகின்றனர்.
இதுகுறித்து, அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், 'தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களை கவர்ந்து ஓட்டுக்களாக மாற்ற பிரதான கட்சிகள், 'கூப்பன்' முறையை கையில் எடுத்து, போட்டி போட்டு வினியோகம் செய்து வருகின்றன. இது மக்களை ஏமாற்றும் செயல்' என்றனர்.
