sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

மதுரை அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவாகுது மக்கள் பணம்; ஓராண்டு செலவு மட்டும் 2 கோடி ரூபாய்!

/

மதுரை அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவாகுது மக்கள் பணம்; ஓராண்டு செலவு மட்டும் 2 கோடி ரூபாய்!

மதுரை அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவாகுது மக்கள் பணம்; ஓராண்டு செலவு மட்டும் 2 கோடி ரூபாய்!

மதுரை அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவாகுது மக்கள் பணம்; ஓராண்டு செலவு மட்டும் 2 கோடி ரூபாய்!

2


UPDATED : மார் 06, 2025 11:46 AM

ADDED : மார் 06, 2025 08:40 AM

Google News

UPDATED : மார் 06, 2025 11:46 AM ADDED : மார் 06, 2025 08:40 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் குடிநீர், கழிப்பறை பயன்பாட்டுக்காக தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால் பற்றாக்குறையால் 45 லோடு லாரிகளில் ரூ.72 ஆயிரம் கட்டணத்தில் தண்ணீர் வாங்கப்படுகிறது.

இங்குள்ள பழைய வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தொட்டி7கள் அமைக்கப்பட்டு மொத்தம் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை தேக்கும் வசதியும் குழாய் இணைப்புகளும் உள்ளன. ஆனால் 6 ஆழ்துளை கிணறுகள் துார்ந்து விட்டன. 3 ஆழ்துளை கிணறுகள் மூலம் 10 சதவீத தண்ணீர் தேவையை கூட பூர்த்தி செய்யமுடியவில்லை. மேலும் அரசு மருத்துவக்கல்லுாரி அருகிலும் எதிரிலும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, தீவிர விபத்து பிரிவு வளாகங்கள் கட்டப்பட்டதால் தண்ணீர் பிரச்னை தலையாய பிரச்னையாக உருவெடுத்தது.

இரண்டாண்டுகளுக்கு முன் ரூ.1.35 கோடி மதிப்பில் வைகையாற்றிலிருந்து (மணலுார் உறைகிணறு பகுதி) தண்ணீரை குழாய் மூலம் பெற்று தெப்பக்குளம் பகுதியில் இருந்து பழைய வளாகத்திற்கு தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் பெற ஏற்பாடு செய்யப்பட்டது.

உறைகிணறு மோட்டார்கள் பழுதடைவதாலும் இணைப்பு குழாய்களில் பிரச்னையாலும் தினமும் தண்ணீர் கிடைப்பதில்லை. இந்நிலையில் கூடுதலாக ஜப்பான் நாட்டு நிதியில் ரூ.313 கோடி மதிப்பில் புதிய அறுவை சிகிச்சை வளாகம் ஆறு மாடியில் கட்டப்பட்டுள்ளதால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது.

எனவே ரூ.25 லட்சம் மதிப்பில் முல்லைப்பெரியாறு குடிநீர்த்திட்டத்தின் கீழ் குருவிக்காரன் சாலை பாலம் பகுதியில் இருந்து மாநகராட்சி குழாய்கள் மூலம் தண்ணீரை பழைய வளாகத்திற்கு கொண்டு வருவதற்காக மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதிலிருந்து தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறலாம். எவ்வளவு தண்ணீர் கிடைத்தாலும் வார்டுகளில் உள்ள கழிப்பறை, குளியலறை, அறுவை சிகிச்சை அரங்குகளின் குழாய்களுக்கு நேரடியாக செல்கிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில் மேல்நிலைத்தொட்டி அமைக்க வேண்டுமென மருத்துவமனை நிர்வாகம் பொதுப்பணித்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மகப்பேறு வார்டு அருகில் இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. மேல்நிலைத் தண்ணீர்த்தொட்டி அமைத்தால் 20 லட்சம் கொள்ளளவுள்ள தண்ணீரை சேமித்து 25 எச்.பி., மோட்டார் மூலம் ஒரு மணி நேரத்தில் 80 ஆயிரம் லிட்டரை வார்டுகளுக்கு அனுப்பலாம்.

பழைய வளாகத்திற்கு 20 லோடு, மற்ற இரு வளாகத்திற்கு 25 லோடு என 45 லோடு லாரி தண்ணீருக்கு தினமும் ரூ.72 ஆயிரம் கட்டணம் செலுத்துகின்றனர். ஓராண்டு வாடகையை கணக்கிட்டால் ரூ.2.62 கோடி செலவாகுது என்பதால் அரசு தாமதமின்றி மேல்நிலைத் தொட்டி அமைக்க முன்வர வேண்டும்.






      Dinamalar
      Follow us