sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

அன்று திருப்போரூர்; நேற்று மடப்புரம் கோயில் உண்டியலில் அலைபேசி; அதிகாரிகள் விசாரணை

/

அன்று திருப்போரூர்; நேற்று மடப்புரம் கோயில் உண்டியலில் அலைபேசி; அதிகாரிகள் விசாரணை

அன்று திருப்போரூர்; நேற்று மடப்புரம் கோயில் உண்டியலில் அலைபேசி; அதிகாரிகள் விசாரணை

அன்று திருப்போரூர்; நேற்று மடப்புரம் கோயில் உண்டியலில் அலைபேசி; அதிகாரிகள் விசாரணை


ADDED : டிச 30, 2024 11:42 PM

Google News

ADDED : டிச 30, 2024 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம் : சென்னை திருப்போரூர் முருகன் கோயிலை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று உண்டியல் திறப்பின் போது பணம், நகைகளுடன் அலைபேசியும் கிடந்தது. இதுகுறித்து ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் அம்மனுக்கு காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை செலுத்த பத்து நிரந்தர உண்டியல்கள், ஒரு கோசாலை உண்டியல் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படும்.

நேற்று ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர்கள் கணபதிமுருகன்( மடப்புரம்), ஞானசேகரன்(ராமநாதபுரம்), இளங்கோ (இருக்கன்குடி) தலைமையில் தன்னார்வலர்கள், கோயில் ஊழியர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் ஒரு ஆன்ட்ராய்டு, இரண்டு சாதாரண அலைபேசிகள், ஒரு வாட்ச் செலுத்தப்பட்டிருந்தன.

உண்டியலில் ஐ போன் :


சில நாட்களுக்கு முன் சென்னை திருப்போரூர் முருகன் கோயிலில் தவறுதலாக ஐ போன் உண்டியலில் செலுத்தப்பட்டது. ஆனால் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கையை திரும்ப வழங்க முடியாது என அறநிலையத்துறை அதிகாரிகள் மறுத்ததும் விவாதங்களை ஏற்படுத்தியது.

அதிகாரிகள் விசாரணை :


மடப்புரம் கோயிலில் நேற்று உண்டியலில் கிடந்த அலைபேசிகள் மிகவும் பழைய மாடலாக உள்ளதால் திருட்டு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டவையா என அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

உண்டியலில் ரூ.31 லட்சத்து 67 ஆயிரத்து 138, பல மாற்று பொன் இனங்கள் 156 கிராமும், வெள்ளி 173 கிராமும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தனன. ஆய்வர் அய்யனார், கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us