sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

கோவில் கதவில் கருணாநிதி 'போட்டோ ' வைத்து அஞ்சலி

/

கோவில் கதவில் கருணாநிதி 'போட்டோ ' வைத்து அஞ்சலி

கோவில் கதவில் கருணாநிதி 'போட்டோ ' வைத்து அஞ்சலி

கோவில் கதவில் கருணாநிதி 'போட்டோ ' வைத்து அஞ்சலி


UPDATED : ஆக 08, 2025 06:50 AM

ADDED : ஆக 08, 2025 02:55 AM

Google News

UPDATED : ஆக 08, 2025 06:50 AM ADDED : ஆக 08, 2025 02:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:சுவாமிமலையில், கோவில் கதவில் கருணாநிதி போட்டோ வைத்து அஞ்சலி செலுத்திய தி.மு.க.,வினர் மீது, பா.ஜ., வினர் புகார் அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில், அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்று கா லை, கோவில் முகப்பில் உள்ள கேட்டில், கருணாநிதி போட்டோவை வைத்து, தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர்.

தகவலறிந்த பா.ஜ.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கோவில் துணை ஆணையர் உமாதேவிக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு கருத்துகள் பரவின.

இதையறிந்த தி.மு.க.,வினர், சி ல மணி நேரத்தில், கோவில் பணியாளர்கள் முன்னிலையில், கருணாநிதி போட்டோவை அகற்றினர். இது தொடர்பாக, பா.ஜ.,வினர் சுவாமிமலை போலீசில் புகார் அளித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us