sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

சிவன்மலை கோவிலில் புடவை வைத்து வழிபாடு

/

சிவன்மலை கோவிலில் புடவை வைத்து வழிபாடு

சிவன்மலை கோவிலில் புடவை வைத்து வழிபாடு

சிவன்மலை கோவிலில் புடவை வைத்து வழிபாடு


ADDED : செப் 27, 2024 06:44 AM

Google News

ADDED : செப் 27, 2024 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : சிவன்மலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று புடவை வைத்து பூஜை செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம், சிவன்மலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. கோவிலிலுள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில், முருகப்பெருமான், பக்தர்கள் கனவில் தோன்றி குறிப்பால் உணர்த்தும் பொருட்களை வைத்து பூஜை செய்வது வழக்கமாக நடந்து வருகிறது.

கடந்த ஆக., 17 ம் தேதி பொருள் மாற்றப்பட்டு, இரண்டு இளநீர் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. இச்சூழலில், திருவண்ணாமலை மாவட்டம், வீரணம் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார், 30 என்பவர் கனவில் உணர்த்திய புடவை வைத்து வழிபட நேற்று சுவாமியிடம் உத்தரவு பெற்றார். அவ்வகையில், நேற்று முதல் புடவை வைத்து பூஜை நடக்கிறது.

இதுகுறித்து கோவில் சிவாச்சாரியார் கூறுகையில், 'சிவன்மலை உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ, அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். புடவை வைக்கப்பட்டுள்ளதால், சமுதாயத்தில் அதன் தாக்கம் போகப்போக தெரிய வரும்,' என்றார்.






      Dinamalar
      Follow us