sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதே நாளில் அன்று/ இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : ஆக 26, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 26, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆகஸ்ட் 26, 1969

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், சுப்பிரமணியம் - வாலாம்பாள் தம்பதியின் மகனாக, 1904, ஜனவரி 4ல் பிறந்தவர், எஸ்.எஸ்.வாசன் எனும் சுப்பிரமணியம் சீனிவாசன்.

இவர் தன், 4வது வயதில் தந்தையை இழந்து, உள்ளூர் பள்ளியில் படித்தார். சென்னை பச்சையப்பன் கல்லுாரியில், 'இன்டர்மீடியட்' முடித்து, பத்திரிகைகளுக்கு விளம்பரம் சேகரிக்கும் பணி செய்தார். சைனா பஜார் பொருட்களை பத்திரிகைகளில் விளம்பரம் செய்து, 'மெயில் ஆர்டர்' முறையில் அனுப்பி வைத்தார். 'மிஸ்ட்ரீஸ் ஆப் மேரீட் லைப்' எனும் நுாலை எழுதி, விற்றார். பூதுார் வைத்தியநாத அய்யர் நடத்திய, 'ஆனந்த விகடன்' இதழை வாங்கி, ஜனரஞ்சகமான இதழாக்கினார்.

அதில், அவர் எழுதிய, 'சதி லீலாவதி' தொடர்கதை, திரைப்படமாகி வெற்றி பெற்றது. கல்கி எழுதிய, 'தியாக பூமி' கதையை, கே.சுப்பிரமணியம் இயக்கினார். இவர், 'ஜெமினி ஸ்டூடியோ'வை துவக்கி, அந்த படத்தை வெளியிட்டார். தொடர்ந்து, நந்தனார், அவ்வையார், இரும்புத்திரை, ஒளி விளக்கு உள்ளிட்ட, 28 தமிழ், 19 தெலுங்கு, 24 ஹிந்தி படங்களை தயாரித்தார். தொட்ட துறைகளில் எல்லாம் புதுமைகளால், வெற்றிக்கொடி நாட்டிய இவர், தன், 65வது வயதில், 1969ல், இதே நாளில் மறைந்தார்.

'விளம்பரமே வியாபாரத்தின் முதுகெலும்பு' என, உணர்த்திய சிறந்த கலைஞன் மறைந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us