sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

பக்க வாத்தியம்

/

பக்க வாத்தியம்

பக்க வாத்தியம்

பக்க வாத்தியம்


PUBLISHED ON : செப் 07, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 07, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'சட்டுபுட்டுன்னு முடிச்சுட்டாங்க!'

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில், தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில், தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மேற்கு மாவட்ட செயலர் சந்திரன், அரக்கோணம் தொகுதி எம்.பி., ஜெகத்ரட்சகன் ஆகியோர் மட்டும் பேசினர்.

ஜெகத்ரட்சகன் பேசும்போது, 'தமிழகத்தில் உள்ள, 234 தொகுதிகளிலும், நம் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் குறித்து தான் பேசுறாங்க' என, சில நிமிடங்கள் அவரதுபுகழ் பாடினார். அதன்பின், வேறு யாருக்கும் பேச வாய்ப்பு தராமல், கூட்டத்தை முடித்து விட்டனர்.

இதனால், கூட்டத்தில் பங்கேற்ற கட்சியினர் எரிச்சல்அடைந்தனர். 'பொது உறுப்பினர்கள் கூட்டம்என அழைத்து, எங்களிடம் நிறை, குறைகளை கேட்காமல், எம்.எல்.ஏ., புகழ் பாட, எங்களை ஏன் அழைக்க வேண்டும்' என, ஒரு நிர்வாகி சலித்துக் கொண்டார்.

அருகில் இருந்த மற்றொருவர், 'நம்மை பேச விட்டா, எம்.பி., - எம்.எல்.ஏ., மேல புகார்களை அடுக்கிடுவோமே... அதான் சாமர்த்தியமா, 'சட்டுபுட்டு'ன்னு கூட்டத்தை முடிச்சுட்டாங்க' என்றபடியே

வெளியேறினார்.






      Dinamalar
      Follow us