PUBLISHED ON : ஆக 23, 2024 12:00 AM

கோவையில், 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பால திறப்பு விழாவுக்கு சென்றார். அதே மேம்பாலத்தில் காரில் பயணித்து திரும்பி வந்தார்.
அவர் பயணித்த வாகனத்தை, விக்டோரியா ஹால், பூம்புகார் வழியாக மணிகூண்டு பகுதிக்கு, 'ஒன்வே'யில் போலீசார் அழைத்து வந்தனர். முதல்வர் வருகையால், மற்ற சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. 'பைவ் கார்னர்' வழியாக வந்த ஆம்புலன்ஸ் நெரிசலில் சிக்கியது.
சைரன் ஒலித்த போதிலும், ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க, போலீசார் முன்வரவில்லை. அதற்கு பதில், சைரனை சிறிது நேரம் அணைத்து வைக்கும்படி டிரைவரிடம் அறிவுறுத்தினர். பின், அவசரம் கருதி, ஆம்புலன்சை கால்நடை மருத்துவமனை வழியாக சுற்றிச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
பார்வையாளர் ஒருவர், 'முதல்வர் பெயரை கெடுக்க போலீசே போதும்... ஆம்புலன்சை யாராவது திருப்பி அனுப்புவாங்களா...' என, புலம்பியவாறு நடந்தார்.

