sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'கார் கிடைத்தால் சந்தோஷம்!'

/

'கார் கிடைத்தால் சந்தோஷம்!'

'கார் கிடைத்தால் சந்தோஷம்!'

'கார் கிடைத்தால் சந்தோஷம்!'

2


PUBLISHED ON : மார் 11, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 11, 2025 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக பா.ஜ., சார்பில், மும்மொழி கொள்கையை ஆதரித்து ராமநாதபுரத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில பொதுச் செயலர் பொன்.பாலகணபதி பேட்டி அளித்தார்.

அவரிடம், ராமநாதபுரத்தில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், 'அண்ணாமலை ஒரு அரைவேக்காடு, ஐ.பி.எஸ்., படித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது' என விமர்சித்தது குறித்து, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பொன்.பாலகணபதி, 'நாஞ்சில் சம்பத் ஒரு கட்சியில் உருப்படியாக இருக்க மாட்டார். அவர் வாயை வாடகைக்கு விட்டு பிழைத்து வருகிறார். ஒரு முறை அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக பேசியதற்கு இன்னோவா கார் வாங்கினார். இம்முறை அண்ணாமலை பற்றி பேசினால், தி.மு.க.,வில் உயர் ரக கார் வழங்க உள்ளதாக கூறுகின்றனர்.

'அதனால், நாஞ்சில் சம்பத் அதிகமாக கூச்சலிடுகிறார். எங்கள் கட்சியை பற்றி பேசுவதால், அவருக்கு கார் பரிசாக கிடைத்தால் எங்களுக்கு சந்தோஷம் தான்' எனக் கூற, சுற்றியிருந்த பா.ஜ., நிர்வாகிகள் சிரித்தனர்.






      Dinamalar
      Follow us