sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'மண்ணை மலடாக்கவே அறிவுரை!'

/

'மண்ணை மலடாக்கவே அறிவுரை!'

'மண்ணை மலடாக்கவே அறிவுரை!'

'மண்ணை மலடாக்கவே அறிவுரை!'


PUBLISHED ON : அக் 03, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 03, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், இயற்கை முறையில் மக்காச்சோளம் சாகுபடி செய்து வரும் விவசாயிகள், 'ஆத்துார், தலைவாசல் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள செடிகளில், அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளதால், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.

வேளாண் அதிகாரிகள், 'ரசாயன பூச்சி கொல்லிகளை பயன்படுத்தினால் படைப்புழுக்கள் அழிந்து விடும்' என, தெரிவித்தனர். அதற்கு விவசாயிகள், 'நஞ்சில்லா விவசாயம் செய்து வரும் எங்களை, ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த சொல்வது சரியா' என, கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க முடியாமல் வேளாண் அதிகாரிகள் நெளிந்தனர்.

விவசாயி ஒருவர், 'மண்ணை மலடாக்கத் தான் வேளாண் அதிகாரிகள் அறிவுரை வழங்குறாங்க... இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க எதுவும் செய்றதில்லை...' என, புலம்பியபடியே கிளம்பினார்.






      Dinamalar
      Follow us