/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'வாங்கிய அடியை மறக்க முடியுமா?'
/
'வாங்கிய அடியை மறக்க முடியுமா?'
PUBLISHED ON : மார் 07, 2026 03:01 AM

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், சென்னை, அம்பத்துாரில் சமீபத்தில் நடந்தது. இதில், தி.மு.க., துணை பொதுச்செயலர் ராஜா பங்கேற்றார்.
அவர் பேசும்போது, 'காங்கிரஸ் ஆட்சியில், மிசா சட்டத்தின் போது, தி.மு.க., பல்வேறு கொடுமைகளை சந்தித்தது. அதன்பிறகும், தி.மு.க., ஏன், காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது என அனைவரும் கேள்வி கேட்கின்றனர். அவர்கள், கண்டிப்பாக அந்த காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
'அந்த தவறுகளுக்கு, அன்றைய பிரதமர் இந்திராவை நேரடியாக குறைகூற முடியாது; அதிகாரிகள் தான் அந்நேரத்தில் கொடுமைகளை செய்தனர். பின், நடந்த தவறுகளுக்கெல்லாம் இந்திரா பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்... அதன்பின்னரே அக்கட்சியுடன் தி.மு.க., கூட்டணி வைத்தது' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'மன்னிப்பு கேட்டாலும், மிசாவுல தி.மு.க.,வினர் அடி வாங்கியது வாங்கியது தானே... அதை மறக்க முடியுமா...?' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தனர்.

