sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'ஓட்டுகளை வளைக்க பேசுறாரு!'

/

'ஓட்டுகளை வளைக்க பேசுறாரு!'

'ஓட்டுகளை வளைக்க பேசுறாரு!'

'ஓட்டுகளை வளைக்க பேசுறாரு!'


PUBLISHED ON : நவ 08, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 08, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் மாவட்டம், ஆத்துார் நகராட்சி பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை; இதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலர் இளங்கோவன் பேசும்போது, 'அ.தி.மு.க.,வை சேர்ந்த ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு தொகுதி, எம்.எல்.ஏ.,க்களை காணவில்லை என, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம் பேசுகிறார்.

'மறைந்த முன்னாள் அமைச்சரான, வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினருக்கு தி.மு.க., எந்த நல்லதும் செய்யவில்லை. அவரது மகன் ராஜாவுக்கு, மாவட்ட செயலர் பதவி கொடுத்திருந்தால், நெஞ்சு வலியால் இறந்திருக்க மாட்டார் என, தி.மு.க.,வினரே பேசுகின்றனர்...' என்றார்.

இதை கேட்ட பார்வையாளர் ஒருவர், 'ஆறுமுகத்தை, அக்கட்சியினர் மறந்துட்டாலும் இவர் மறக்காம இருக்காரே...' எனக் கூற, 'இவர், வீரபாண்டி தொகுதியில நிற்க, 'பிளான்' பண்றாரு... அதான், ஆறுமுகம் ஆதரவாளர்கள் ஓட்டுகளை வளைக்க இப்படி பேசுறாரு...' என்றபடியே கிளம்பினார்.






      Dinamalar
      Follow us