PUBLISHED ON : பிப் 16, 2026 03:03 AM

அன்புமணி அணியின், பா.ம.க., பொருளாளர் திலகபாமா, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'கட்சியும், மாம்பழம் சின்னமும் எங்களிடம் தான் இருக்கிறது. கூட்டணியில் எத்தனை தொகுதிகள் பெறுவது என்பது முக்கியமில்லை; தி.மு.க.,வை வீட்டிற்கு அனுப்ப, எல்லாரும் விட்டுக் கொடுப்பது தான் முக்கியம். நாங்கள் எண்ணிக்கையை பற்றி இப்போது வரை பேசவில்லை.
'வரவிருக்கும் சட்டசபை தேர்தலில், த.வெ.க., தாக்கத்தை ஏற்படுத்தும்; அது, தி.மு.க.,வின் ஓட்டுகளைத் தான் பிரிக்கும். விருதுநகர் மாவட்டத்தில் ஒரு தொகுதியில், பா.ம.க., சார்பில் போட்டியிட வேண்டும் என, கட்சித் தலைவர் அன்புமணியிடம் கூறி உள்ளேன்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'இந்த மாவட்டத்தில், பா.ம.க., எங்க இருக்குன்னு, 'லென்ஸ்' வச்சு தான் தேடணும்...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.

