PUBLISHED ON : ஏப் 24, 2026 12:56 AM

வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்திசமீபத்தில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில், கே.வி.குப்பம் தொகுதியில் அதிக ஓட்டுகள் பெற்று நான் வெற்றி பெறுவேன். அ.தி.மு.க., கூட்டணியின் அனைத்து பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அருமையாக பணியாற்றியதால், என் வெற்றி உறுதி.
'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும். 2011 முதல் 2021ம் ஆண்டு வரை, 10 ஆண்டு காலம் அ.தி.மு.க., சிறப்பான ஆட்சி தந்தது. அதேபோன்று மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி மலரும்' என்றார்.
இதை கேட்ட அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், 'நம்ம கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்று, நம்மை விட ரொம்பவே நம்பிக்கையா இருக்காரே...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.

