sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'இனி மாத்தி யோசிக்கணும்!'

/

'இனி மாத்தி யோசிக்கணும்!'

'இனி மாத்தி யோசிக்கணும்!'

'இனி மாத்தி யோசிக்கணும்!'


PUBLISHED ON : அக் 14, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 14, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாநகர் மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், மனித சங்கிலி போராட்ட ஏற்பாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி பேசுகையில், 'மாநகராட்சி நிர்வாகம், 150 சதவீதம் வரியை உயர்த்தியும், கம்யூ., கவுன்சிலர்கள் கண்டுகொள்ளவே இல்லை. இஸ்ரேல் நாட்டில் போர் நடப்பதுதான் அவர்களுக்கு தற்போது கவலையாக இருக்கிறது.

'திருப்பூர் மக்கள் குறித்து கவலையில்லை. தி.மு.க., கவுன்சிலர்களே தோற்றுவிடும் அளவுக்கு, மேயரையும், துணை முதல்வரையும் புகழ்ந்து தள்ளுகின்றனர். மக்களுக்கு பாதிப்பு என்றால், இனி, திருப்பூரில் நாம்தான் போராடியாக வேண்டும்' என்றார்.

அக்கட்சி மூத்த நிர்வாகி ஒருவர், 'இப்படிப்பட்ட ஆளுங்கட்சி அடிமைகளை தான், நம்ம பொதுச்செயலர் பழனிசாமி, 'எப்படியும் நம்ம அணிக்கு வந்து விடுவர்'னு நினைக்கிறார்... இனியாச்சும் அவர் மாத்தி யோசிக்கணும்...' என, முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் அதை ஆமோதித்து தலையாட்டினர்.






      Dinamalar
      Follow us