தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'தவறான உதாரணம் ஆகிடுச்சே!'

'தவறான உதாரணம் ஆகிடுச்சே!'

'தவறான உதாரணம் ஆகிடுச்சே!'


PUBLISHED ON : நவ 09, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 09, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூரில், சில மாதங்களுக்கு முன் நாட்டு வெடி தயாரித்தபோது விபத்து ஏற்பட்டு நான்கு பேர் பலியாகினர்; 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகின.இச்சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் மற்றும் பலியானோர் குடும்பங்களுக்குநிவாரணம் வழங்கக் கோரி, அ.தி.மு.க., சார்பில், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு அளித்தனர்.

பின், அக்கட்சியின் மாவட்டச் செயலரும், பொள்ளாச்சிதொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெயராமன் கூறுகையில்,'கள்ளச்சாராயம் குடித்து இறந்தால், உடனே 10 லட்சம்ரூபாய் நிவாரணம் தருகின்றனர். இங்கு, முறைகேடாகநாட்டு வெடி தயாரித்துள்ளனர். அங்கு பணிபுரிந்தவர்கள், பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 பைசா கூட நிவாரணம் தரவில்லை. நிவாரணம் வழங்காவிட்டால், போராட்டம் நடத்துவோம்' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'கள்ளச்சாராய பலிக்கு அரசு 10 லட்சம் ரூபாய் தந்தது, தவறான முன் உதாரணம் ஆகிடுச்சே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us