sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'நாற்காலிகள் பறந்திருக்கும்!'

/

'நாற்காலிகள் பறந்திருக்கும்!'

'நாற்காலிகள் பறந்திருக்கும்!'

'நாற்காலிகள் பறந்திருக்கும்!'

1


PUBLISHED ON : பிப் 04, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 04, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் மாவட்டம்,- ஆவடி பைபாஸ் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவராக அஸ்வின்குமார் என்பவர் அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சியின் மாநில செயலர் சுமதி வெங்கடேசன் முன்னிலையில், பா.ஜ.,வின் ஒரு தரப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்; இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின், பேட்டியளித்த சுமதி வெங்கடேசன், 'மாநில தலைமை, அஸ்வின்குமாரை மாவட்ட தலைவராக தேர்வு செய்துள்ளது. அதில், சிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்; மன வருத்தம் இருக்கலாம். ஆனால், தலைமை முடிவுக்கு கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும். இது போன்ற பிரச்னைகள் எல்லா கட்சிகளிலும் இருப்பது தான். இதை பெரிதுபடுத்த தேவையில்லை' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'உண்மை தான்... இவங்களா இருக்கப் போய் வாக்குவாதத்தோடு முடிஞ்சது... இதே காங்கிரஸ் கட்சியா இருந்தால், வேட்டியை உருவி, நாற்காலிகள் பறந்திருக்கும்...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தனர்.






      Dinamalar
      Follow us