sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'எம்.எல்.ஏ.,வை உபசரிக்க ஆளில்லை!'

/

'எம்.எல்.ஏ.,வை உபசரிக்க ஆளில்லை!'

'எம்.எல்.ஏ.,வை உபசரிக்க ஆளில்லை!'

'எம்.எல்.ஏ.,வை உபசரிக்க ஆளில்லை!'


PUBLISHED ON : அக் 11, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 11, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட காவேரிராஜபுரத்தில், 12.13 கோடி ரூபாயில், 'சிட்கோ' வாயிலாக தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இதை, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

காவேரிராஜபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில், திருவள்ளூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த திருவள்ளூர் சிட்கோ கிளை மேலாளர் நந்தகுமார், எம்.எல்.ஏ.,வுக்கு இளநீரை அவரே கொண்டு வந்து கொடுத்தார்.

இதை பார்த்த இளம் நிருபர் ஒருவர், 'அதிகாரியே இளநீர் கொடுத்து, எம்.எல்.ஏ.,வுக்கு ஐஸ் வைக்கிறாரோ...' என, முணுமுணுத்தார். மூத்த நிருபரோ, 'அதெல்லாம் இல்லப்பா... இந்த ஒன்றியத்துல நிலவுற கோஷ்டிப்பூசலால கட்சி நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சிக்கு வரல... எம்.எல்.ஏ.,வை உபசரிக்க ஆளில்லாம, அதிகாரியே உபசரிக்கிறாரு...' எனக் கூற, சக நிருபர்கள் சிரித்தனர்.






      Dinamalar
      Follow us