/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'காதுல பூ சுத்த பார்க்கிறாங்க!'
/
'காதுல பூ சுத்த பார்க்கிறாங்க!'
PUBLISHED ON : ஜன 29, 2026 04:32 AM

சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான, பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்க கோரி, தமிழ்நாடு ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்கம் உட்பட பல்வேறு அமைப்பினர் இணைந்து சமீபத்தில், பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எதிரே, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பேச்சு நடத்த, மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். அதில் ஒரு அதிகாரி, 'உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதிக் கொடுங்கள். உயர் அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க சொல்கிறேன்' என்றார்.
இதை கேட்ட விவசாயி ஒருவர், '20 ஆண்டுகளாக மனு கொடுத்து, எதுவும் நடக்காததால் தான் காலவரையற்ற போராட்டத்தில் இறங்கிட்டோம். மறுபடியும் முதல்ல இருந்தா...' என, அலுத்துக் கொண்டார்.
அதற்கு மற்றொரு விவசாயி, 'பிரச்னையை தீர்க்காம அதிகாரிகள் மனு வாங்கியே பழகிட்டாங்க... மறுபடியும் மனு வாங்கி, நம்ம காதுல பூ சுத்த பாக்குறாங்க' எனக் கூற, அனைவரும் ஆமோதித்தனர்.

