sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'இது சகஜம் தான் போல!'

'இது சகஜம் தான் போல!'

'இது சகஜம் தான் போல!'


PUBLISHED ON : நவ 02, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 02, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி மாவட்டம், அரூரில் புது பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா நடந்தது. இதில், அமைச்சர்கள் நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில், அரூர் டவுன் பஞ்., தலைவர் இந்திராணி மேடையில் அமர்ந்திருக்க, அவருடைய கணவரும், டவுன் பஞ்., துணைத் தலைவருமான சூர்யா தனபால்நின்று கொண்டிருந்தார்.

அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், 'நம்முடையசூர்யா தனபாலின் மனைவி இந்திராணி அம்மையார், உட்கார்ந்து இருக்கிறார். அவருடைய கணவர், பாவம் நின்று கொண்டிருக்கிறார். இது, உள்ளாட்சி பதவிகளில்மகளிருக்கான, 50 சதவீதம் இட ஒதுக்கீட்டின் சாதனை' என்றார்.

தொடர்ந்து அமைச்சர் நேரு பேசுகையில், 'சூர்யா தனபால் நின்று கொண்டிருக்கிறார் என பன்னீர் செல்வம் சொன்னார். இங்கு மட்டுமல்ல, அங்கேயும் அப்படித்தான்' என, பன்னீர்செல்வத்தை பார்த்து சிரித்தபடியே கூறினார்.

இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'எல்லார் வீட்டுலயும்இது சகஜம் தான் போல...' என கமுக்கமாக கூற, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us