/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'கோவை கலெக்டரை சென்னைக்கு மாற்ற உதயநிதி ஆசை?'
/
'கோவை கலெக்டரை சென்னைக்கு மாற்ற உதயநிதி ஆசை?'
PUBLISHED ON : பிப் 05, 2026 04:12 AM

சர்வதேச ஜவுளித் தொழில் மாநாடு, சமீபத்தில் கோவையில் நடந்தது. தமிழக துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று, மாநாட்டை துவக்கி வைத்தார்.
ஜவுளிக் கொள்கை, விருதுகள் வழங்கி ஆங்கிலத்தில் பேசினார். மேடையில் இருந்தவர்கள், அதிகாரிகள் பெயரை வரிசையாக குறிப்பிட்டு பேசிய உதயநிதி, கோவை கலெக்டர் பவன்குமாரை, சென்னை கலெக்டர் என குறிப்பிட்டு பேசினார்.
முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர், 'துணை முதல்வர் மாசத்துக்கு ஒரு தடவை கோவைக்கு வந்தாலும், நம்மூரு கலெக்டரை சென்னை கலெக்டர்னு மாத்தி சொல்லிட்டாரே...' என, ஆதங்கப்பட்டார்.
அருகில் இருந்தவர், 'நம்ம கலெக்டர் மீது பிரியப்பட்டு, அவரை சென்னைக்கு மாத்த பிளான் பண்ணிட்டாரோ என்னவோ...' எனக் கூற, முன்வரிசையில் அமர்ந்திருந்தவர், ஆமோதிப்பது போல் தலையசைத்தார்.

