நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய்கள் தொல்லை
மணவெளி பகுதியில், தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
சிவபெருமாள், மணவெளி.
பள்ளத்தால் விபத்து ஏற்படும் அவலம்
முதலியார்பேட்டை அய்யனார் கோவில் தெருவில், அரசு பள்ளி அருகில் தோண்டப்பட்ட பள்ளம் மூடாமல் இருப்பதால், விபத்து ஏற்பட்டு வருகிறது.
முருகேசன், முதலியார்பேட்டை.
குப்பைகள் தேக்கம்
திலாசுப்பேட்டை காளிக்கோவில் தெருவில் குப்பை வண்டி சரியாக வராமல் இருப்பதால், குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
மூவேந்தன், திலாசுப்பேட்டை.
தெரு விளக்கு எரியவில்லை
கரிக்கலாம்பாக்கத்தில் இருந்து கோர்க்காடு வரை தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
அருண்குமார், ஏம்பலம்.