sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

சுக்கு - மல்லி காபி கடையை நடத்துகிறேன்!

/

சுக்கு - மல்லி காபி கடையை நடத்துகிறேன்!

சுக்கு - மல்லி காபி கடையை நடத்துகிறேன்!

சுக்கு - மல்லி காபி கடையை நடத்துகிறேன்!


PUBLISHED ON : பிப் 10, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 10, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த 70 ஆண்டுகளாக, மதுரையில் சுக்கு - மல்லி காபிக்காக மட்டுமே கடையை நடத்தி வருவது பற்றி கூறுகிறார் ஜான்ஸ்:

அப்பா வைத்தியராக இருந்தார். 1954ல் இந்த கடையை ஆரம்பித்த அவரை தொடர்ந்து, நான் நடத்தி வருகிறேன்.

எனக்கு மூன்று மகன்கள். நான் எங்க அப்பா கூட கடைக்கு வர ஆரம்பித்த போது, ஒரு காபி விலை, 10 பைசா; தற்போது, 20 ரூபாய்க்கு விற்கிறேன்.

அப்பா சொல்லிக் கொடுத்த அதே முறையை பின்பற்றி தான், தற்போது வரை, சுக்கு - மல்லி காபி போடுகிறோம். நயம் கருப்பட்டி, சுக்கு, மல்லி, மிளகு இதை சரியான விகிதத்தில் வென்னீரில் போட்டு பதமாக காய்ச்சிக் கொடுக்கிறோம்.

சுக்கு - மல்லி காபி உடம்புக்கு மிகவும் நல்லது; செரிமானத்துக்கு உதவும்; வயிறு உபாதைகளை சரிசெய்யும்; மழைக் காலங்களில் சளி, இருமலை கட்டுப்படுத்தும்.

பெரும்பாலும் மாலை நேரங்களில் தான் மக்கள் அதிகம் வருகின்றனர். ஆனால், 'சுக்கு - மல்லி காபி குடிப்பதற்கு சரியான நேரம் மதிய நேரம் தான்' என்று, வைத்தியரான என் அப்பா கூறுவார்.

'காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, இரவில் கடுக்காய்'ன்னு சொல்லி வைத்துள்ளனர். மதிய நேரம், சாப்பிடுவதற்கு ஒரு அரை மணி நேரம் முன்னாடி, சுக்கு - மல்லி காபியை குடித்தால், செரிமானம் நல்லா நடக்கும்.

ஒரு நாளைக்கு, 500 பேர் வரை எங்கள் கடைக்கு வருகின்றனர். மழைக்காலம், குளிர்காலம் எனில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

காலையில் 9:00 மணிக்கு கடையை திறப்போம். இரவு 10:00 மணி வரை, சுடச்சுட சுக்கு - மல்லி காபி கிடைத்தபடியே இருக்கும். இன்றைய இளம் தலைமுறையும் எங்கள் கடையில் வந்து, சுக்கு - மல்லி காபி குடிப்பது, எங்களுக்கே ஆச்சரியம் தான்.

சிகரெட்டுக்கு எங்கள் கடையில் அனுமதி இல்லை. வேர்க்கடலை உருண்டை, கம்பு, கேப்பை உருண்டை போன்றவையும் கிடைக்கும்.

நாங்கள் விற்கும் கைச்சுற்றல் முறுக்கும், சுக்கு - மல்லி காபியும் சேர்த்து சாப்பிடுவதற்கென வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

பனங்கற்கண்டு சேர்த்த எங்களுடைய, ஜான்ஸ் சுக்கு - மல்லி கலவையும் விற்கிறோம். அதற்கும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு.

நல்லதை கொடுத்தால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்கள் நம்மை கைவிட மாட்டார்கள் என்பதை தான், 70 ஆண்டுகளாக இந்த தொழில் எங்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் மந்திரம்!






      Dinamalar
      Follow us