sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

புகார் பெட்டி: பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டி வேதநாராயணபுரத்தில் தவிப்பு

/

புகார் பெட்டி: பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டி வேதநாராயணபுரத்தில் தவிப்பு

புகார் பெட்டி: பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டி வேதநாராயணபுரத்தில் தவிப்பு

புகார் பெட்டி: பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டி வேதநாராயணபுரத்தில் தவிப்பு


ADDED : பிப் 27, 2025 12:18 AM

Google News

ADDED : பிப் 27, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டி வேதநாராயணபுரத்தில் தவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம், ஆலப்பாக்கம் ஊராட்சியில், வேதநாராயணபுரத்தில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வந்தனர்.

இந்த தொட்டி இடிந்து விழும் நிலையில் இருந்ததால், புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என, ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் குறைதீர்க்கும் கூட்டங்களில், மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, 2022-23ம் நிதியாண்டில், 15வது மானிய நிதி 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30,000 லிட்டர் கொள்ளளவு உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன் பின், நீர்த்தேக்க தொட்டி கட்ட 'டெண்டர்' விடப்பட்டு, கட்டுமானப் பணிகள் முழுதாக முடிந்துள்ளன. தற்போது, நீர்த்தேக்க தொட்டி தயார் நிலையில் உள்ளது. இதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

- பி.கீர்த்தனா, செங்கல்பட்டு.






      Dinamalar
      Follow us