sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

புகார் பெட்டி. சேதமான மின்கம்பம் சீரமைக்க கோரிக்கை

/

புகார் பெட்டி. சேதமான மின்கம்பம் சீரமைக்க கோரிக்கை

புகார் பெட்டி. சேதமான மின்கம்பம் சீரமைக்க கோரிக்கை

புகார் பெட்டி. சேதமான மின்கம்பம் சீரமைக்க கோரிக்கை


ADDED : பிப் 19, 2025 11:51 PM

Google News

ADDED : பிப் 19, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூவத்துார் பஜார் பகுதியில் இருந்து நெடுமரம் கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் வயல்வெளியில் உள்ள மின்மோட்டார்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் உள்ளன.

சாலை ஓரத்தில் சர்ச் அருகே உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமென்ட் கான்கிரீட் உதிர்ந்து சேதமடைந்து உள்ளது.

பலத்த காற்று வீசினால் மின்கம்பம் சாலையில் சாய்ந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆகையால் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

- இ.ஆறுமுகம்,

கூவத்துார்.

சேதமான கழிப்பறை

சீரமைக்க கோரிக்கை

திருப்போரூர் பேரூராட்சியில், திருவஞ்சாவடி தெரு, மீன் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் பொது கழிப்பறைகளை பேரூராட்சி நிர்வாகம் கட்டியுள்ளது.

அவை முறையான பராமரிப்பு இல்லாததால் பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளது. இவற்றின் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருக்கும் குழாய்கள், கழிப்பறை உபகரணங்கள் உடைந்துள்ளது. பேரூராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.கிருஷ்ணமூர்த்தி, திருப்போரூர்.

மேம்பாலத்தில் மணல் குவியல்

விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

தாம்பரம் அடுத்த வண்டலுார் ஜி.எஸ்.டி., சாலையிலிருந்து, வாலாஜாபாத் செல்லும் மேம்பாலத்தை, தமிழக நெடுஞ்சாலை துறை முறையாக பராமரிப்பது இல்லை.

இதனால், மேம்பாலத்தின் ஓரம் மணல் திட்டுகள் நிறைந்துள்ளது. இந்த மணல் திட்டுகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயமடைவது அடிக்கடி நிகழ்கிறது. நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ரா. ஜானகி, மண்ணிவாக்கம்.






      Dinamalar
      Follow us