/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி ஊராட்சி அலுவலகம் கட்டப்படுமா?
/
புகார் பெட்டி ஊராட்சி அலுவலகம் கட்டப்படுமா?
ADDED : பிப் 03, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊராட்சி அலுவலகம் கட்டப்படுமா?
மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கெண்டிரச்சேரி ஊராட்சியில், 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்..
இங்கு, 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருந்தது.
இதனால், தற்காலிகமாக இ--சேவை மைய வளாகத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டு ஓராண்டிற்கு மேலாகி உள்ள நிலையில், புதிதாக கட்டப்படவில்லை புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் அமைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கந்தவேலன்,
மதுராந்தகம்.