/
புகார் பெட்டி
/
சென்னை
/
குதிரைகள் தொல்லை பூந்தமல்லியில் அதிகரிப்பு
/
குதிரைகள் தொல்லை பூந்தமல்லியில் அதிகரிப்பு
ADDED : ஜூலை 15, 2025 10:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லியில், குதிரைகள் மற்றும் கோவேறு கழுதைகளை சிலர் வளர்க்கின்றனர். அவற்றை வீடுகளில் வளர்க்காமல் திரியவிடுவதால், பள்ளி மைதானம், குடியிருப்பு பகுதியில் சூழ்கின்றன.
இளைஞர்கள் சிலர் குதிரைகளை சீண்டி விளையாடுகின்றனர். அப்போது மாணவர்களை, குதிரைகள் கடிப்பதும், உதைப்பதும் நடக்கிறது.
சாலைகளில் திரிவதால், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. பொது இடத்தில் சுற்றித்திரியும் கோவேறு கழுதைகள், குதிரைகளை பிடித்து அகற்ற வேண்டும்.