ADDED : ஏப் 02, 2025 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழுதடைந்த சாலை
புதுச்சத்திரம் நாரை குளம் சாலை பழுதடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
-பாலமுருகன், வில்லியநல்லுார்.
நாய் தொல்லையால் அச்சம்
விருத்தாசலம் பெரியார் நகரில் சுற்றித்திரியும் நாய்களால் பெண்கள், சிறுவர்கள் வீதியில் நடந்து செல்ல முடியாமல் அச்சமடைந்துள்ளனர்.
-சந்தோஷ், விருத்தாசலம்.
கழிவுநீரால் துர்நாற்றம்
விருத்தாசலம் நகராட்சி இறைச்சி மார்க்கெட்டில் பொதுமக்கள் சென்று வர முடியாத அளவிற்கு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
-கணேசன், விருத்தாசலம்.